நான் யார் ?

Saturday, 30 July 2011

உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7

Reactions: 
      உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7வரை கொண்டாட படுகிறது . தாய்ப்பாலின் அருமைகளை விளக்கவே இந்த விழா கொண்டாட படுகிறது .







                    உலக தாய்ப்பால் வாரம் அகஸ்ட் 1 -7



குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் , அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும் , நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும் .




    முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து . ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும் .குழந்தைக்கு போடும் முதல் தடுப்பு மருந்து என்றும் இதை சொல்லலாம் .




இதில் அதிகமாக புரத சத்தும் , நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள்ளன . விட்டமின்கள் அதிகமாகவும் , எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும் .






எனவே ஒரு துளி கூட வீணாக்காமல் சீம்பால் தரவேண்டும் .






குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரம் தனது எடையில் பத்து சதவிகிதம் குறையும் . இது இயல்பானதே , மூன்றாம் வாரத்தில் இருந்தே எடை கூட ஆரம்பிக்கும்




குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரவேண்டும் .




எடை குறைவான குழந்தைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரலாம் .






சாதாரணமாக தாய்க்கு ஆறு மாதம் வரை தினமும் 750 ml பால் சுரக்கும் , ஆதற்கு பிறகு 500-600 ml பால் சுரக்கும் . இரண்டு வயது வரை பால் தந்தால் நல்லது.




பால் கொடுப்பதால் தாய்க்கு மார்பு புற்றுநோய் , ஓவரி புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் .




பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் பால் கொடுத்தால் தாய்க்கு உதிரபோக்கு குறையும் . ஏனெனில் பால் குடிக்கும் போது oxytocin என்ற ஹோர்மோன் சுரப்பதால் அது கர்பப்பையை சுருங்க செய்து ரத்தபோக்கை குறைக்கும் .






தொடர்ந்து ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வந்தால் மாதவிடாய் தள்ளிபோடபடும் , இதன் முலம் அடுத்த பிரசவத்தை தடுக்கமுடியும் .





தாய் பாலால் தாய்க்கும் பல நன்மைகள் உண்டு . எனவே தவறாமல் தாய்ப்பால் தரவேண்டும்.






குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய் பால் மட்டுமே தரவேண்டும்










தண்ணீர் கூட தர தேவை இல்லை ( கோடையில் கூட ) ஏனென்றால் பாலில் 88 % நீர் உள்ளது .





ஆறு மாதங்களுக்கு பிறகு பாலுடன் இணை உணவு தரவேண்டும்






தாய் பால்இரண்டு வயது வரை தர வேண்டும் .






குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்





குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும் . இது அளவில் குறைவாக , மஞ்சள் நிறத்தில் இருக்கும் . குழந்தைக்கு தாய் தரும் முதல் தடுப்பு மருந்து சீம்பால் ஆகும் . எனவே முதல் 3-4 நாட்கள் சீம்பால் மட்டும் தர வேண்டும் .






( கழுதைப்பால் , சீனிதண்ணி, சர்க்கரை ஆகிய பொருள்களை பிறந்தவுடன் தரும் பழக்கம் சில இடங்களில் உள்ளது , இது தவறான பழக்கம் .)






பால் பரிசுத்தமானது , எனவே பிறந்தவுடன் சுத்தமான உணவு தாய்ப்பால் மட்டுமே .






பாலில் நோய் எதிர்ப்பு சக்தி தர நிறைய பொருள்கள் உள்ளன .(secretary IgA, Macrophages,Lymphocytes,Lactoferrin, Lysozyme, Bifidus factor,Interferon) எனவே வயிற்றுபோக்கு , சளி முதலிய வியாதிகள் வராமல் தடுக்கும் .






பால் இயற்கையானது எனவே எளிதில் செரிக்கும் .






 
குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு வருடங்களில் மிக வேகமாக இருக்கும். அதற்க்கு தேவையான CYSTIENE ,TAURINE ஆகிய சத்துக்கள் தாய்பாலில் சரியான அளவில் உள்ளன . ( கன்றுகுட்டி பிறந்தவுடன் துள்ளி ஓடும் , ஆனால் மனித குழந்தை தத்தி நடக்க ஒரு வருடம் ஆகிறது . ) தாய் பால் மட்டுமே சரியான ஊட்டசத்தை சரியான நேரத்தில் தரும்
 
வேலைக்கு செல்லும் தாய் :


தாய் பாலே குழந்தைக்கு அரு மருந்து . வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பாலை எடுத்து சேமித்து பின் தரலாம் .






சாதாரண அறைவெப்ப நிலையில் எட்டுமுதல் பத்துமணி நேரம் வைக்கலாம் .






குளிர் பதன பெட்டியில் 24 மணி நேரமும் ,






அதனுள் உள்ள ப்ரீசர்(-20* c) இல் மூன்று மாதங்கள் வைத்திருக்கலாம் .






எனவே வேலைக்கு செல்வதை காரணமாக சொல்லி தாய் பால்தராமல் இருக்காதிர்கள்


10 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

anbu said...

அருமையான தகவல்கள் மிக எளிமையாக த்ரப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்

சேலம் தேவா said...

பயனுள்ள தகவல்கள்..!!

நந்தா ஆண்டாள்மகன் said...

நல்ல பதிவு மிக்க நன்றி டாக்டர்..

Anonymous said...

உங்கள் வலைப்பூவில் தகவல்கள் அனைத்தும் அருமை.

இதில் வாரவாரியாக இருக்கும் வலைப்பதிவு பட்டியலை மாதவாரியாக மாற்றுவீரேயானால் அது நல்லதொரு பழகிய உருவாக இருக்கும்.

FOOD said...

PEDICON-2001ல் சந்தித்தேன். இன்று உங்கள் தளத்திற்கு முதல் வருகை. தொடர்ந்து வருகிறேன். அருமையான தகவல்களை அள்ளித்தந்துள்ளீர்கள். நன்றி.

sudha said...

hi sir.. its sudha.. nice blogs... came to know about it only today............

Baby Dresses India said...

Every mother keeps this tips to follow. Really great information for born baby. Thanks to sharing here.

Anonymous said...

தாங்கள் சொல்லும் பயனுள்ள தகவல்களோடு கூடவே அதை எளிய தமிழில் சொல்வது இன்னும் சிறப்பாக உள்ளது.

K Senthilkumar Mettur said...

எங்களுக்கு மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி